|
இறைவா இறைவா உனை மறவேன் இனியும் என்னில் இன்னல் வேண்டாம் விடியல் தோறும் விழியில் ஈரமையா விரைந்து தருவாயா விடுதலை தருவாயா
என்னை படைத்த பரம்பொருள் நீயே ஏங்க வைத்து பார்ப்பது ஏனோ இதய வலியில் தினமும் அழுகின்றேன் இளமையை, சிறையில் தினமும் வாட்டுகின்றேன்
அருளை பொழியும் ஆண்டவன் நீயே அடிமனம் எரிகிறது அணைக்க வருவாயா உன் புகழ் இசைப்பேனே உன் பக்தன் ஆனேனே உன் அடிமை நானையா உதவிக்கு வருவாயா
உறவைப்பிரிந்து வாழ்ந்தது போதும் உள்ளம் தனிமையில் தேய்ந்தது போதும் கண்ணீர் மழையில் தினமும் நனைகின்றேன் கருணைக்கடலே கண்திறக்க மாட்டாயா
உன்னை விடவே யாரும் அருகிலில்லை உன் பெயர் அழைக்கின்றேன் உன்காதில் கேட்கலயா அமைதி தருவாயா அடைக்கலம் தருவாயா ஆறுதல் கொடுப்பாயா ஆத்மாவைக் காப்பாயா
|
|
|
|
No comments:
Post a Comment